கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் கற்றல் வளநிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
கல்வியமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 21மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் வி.செல்வானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் . சு. முரளிதரன் ,கிளிநொச்சி தெற்கு வலய வலயக்கல்விப்பணிப்பாளர் பிரதீபா காயத்திரி கஜபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் விருந்தினராக கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர் சு. தர்மரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
