பல தசாப்தங்களுக்குப் பிறகு, ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டத்தில் மீண்டும் கரும்புச்செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டு குறித்த செய்கையை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர். ,யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.சிவசங்கர், விவசாய ஆராய்ச்சி மேலதிக பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்கண்ணா,மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் பி.புஸ்பராணி, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.பிரகாஸ்,Natural Roots நிறுவனத்தின் பணிப்பாளர், மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கின் மோகன் விவசாயிகள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர். 20விவசாயிகளை தெரிவு செய்யப்பட்டு 20ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த கரும்பினை Natural. Roots விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது
