Home இலங்கை குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டியின் 15 மில்லியன் பெறுமதியான சொத்து முடக்கம்

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டியின் 15 மில்லியன் பெறுமதியான சொத்து முடக்கம்

0
image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன்றின் பயன்பாடு, உரிமை மாற்றம் அல்லது விற்பனையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, வெலிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை பயன்படுத்துதல், உரிமை மாற்றம் செய்தல் அல்லது விற்பனை செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த வீடும் அது அமைந்துள்ள காணியும் சேர்த்து சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக, குறித்த சொத்தை இனிமேல் பயன்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது.

Source: https://samugammedia.com/freezing-of-assets-worth-15-million-belonging-to-midigama-chutti-who-is-alleged-to-have-been-involved-in-criminal-activities-1788509186

NO COMMENTS

Exit mobile version