Home இலங்கை குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் – தேயிலைக் கொழுந்து பறித்தபோது விபரீதம்!

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் – தேயிலைக் கொழுந்து பறித்தபோது விபரீதம்!

0
image

மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் தோட்ட பிரிவில் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தனர். 

அதன்போது அங்கிருந்த  குளவிக்கூடு களைந்து கொட்டியதில் அப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர். 

குளவிக் கொட்டுக்கு இலக்கான  20 பெண்கள்  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Source: https://samugammedia.com/women-hospitalized-after-wasp-stings–mishap-while-plucking-tea-buds-1783945755

NO COMMENTS

Exit mobile version