திருகோணமலை – சம்பூர், மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த கடற்கரைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பயன்படுத்தப்பட்ட சுருக்கு வலை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (17) காலை சுமார் 11.30 மணியளவில், பரக்கும்பா விசாரணைச் செயற்பாட்டு படையணியைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட ரோந்துப் பணியின்போதே குறித்த வலை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சுருக்கு வலை மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/unauthorized-purse-seine-nets-seized-in-sampur-1789715020
