Home இலங்கை சம்பூர் படுகொலை 36வது ஆண்டு நினைவேந்தல்

சம்பூர் படுகொலை 36வது ஆண்டு நினைவேந்தல்

0
image

சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று  மாலை இடம்பெற்றது.

இந்த சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதில் சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1990.07.07 அன்று சம்பூர் பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 57 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://samugammedia.com/36th-anniversary-of-the-sambur-massacre-1783491903

NO COMMENTS

Exit mobile version