Home இலங்கை டைனமைட் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிப்பு

டைனமைட் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிப்பு

0
image

டைனமைட் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த சம்பவம் தொடர்பில், 200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகையுடன் படகொன்றும் சந்தேகநபர் ஒருவரும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீன் தொகுதி தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் இணைந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த மீன் தொகுதி மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைனமைட் அல்லது ஏனைய வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது இலங்கையில் சட்டவிரோதமான செயற்பாடாகும். இவ்வாறான முறைகள் ஒரே நேரத்தில் அதிகளவிலான மீன்களை அழிப்பதுடன், சிறிய மீன்கள் உள்ளிட்ட ஏனைய கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீன் தொகுதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அதனை மனித நுகர்வுக்கு பயன்படுத்தாமல் அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதி நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் இலங்கை கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாகும்.

Source: https://samugammedia.com/over-200-kg-of-fish-caught-using-dynamite-destroyed-following-a-court-order-1788852541

NO COMMENTS

Exit mobile version