Home இலங்கை தந்தையை குத்திக் கொன்ற16 வயது மகன்! இலங்கையை உலுக்கிய சம்பவம்

தந்தையை குத்திக் கொன்ற16 வயது மகன்! இலங்கையை உலுக்கிய சம்பவம்

0
image

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்குவளை பகுதியில் நேற்று (05) இரவு ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், குடும்பத் தகராறு காரணமாக குறித்த நபரை அவரது 16 வயதுடைய மகன் கூரிய ஆயுதமொன்றால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 40 வயதுடைய நபர் உயிரிழந்துள்ள நிலையில், 

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/16-year-old-son-stabs-father-to-death-incident-shakes-sri-lanka-1788679203

NO COMMENTS

Exit mobile version