Home இலங்கை தாயகப் பாடலை எடிட் செய்து தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

தாயகப் பாடலை எடிட் செய்து தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

0
image

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பாடகர் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/singer-arrested-in-jaffna-for-editing-and-uploading-patriotic-song-on-the-website-1780413347

NO COMMENTS

Exit mobile version