தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் 6ஆம் நாள் நினைவேந்தல், திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் – உப்பூறல் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை இடம்பெற்றது.
இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விளக்கேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
