Home இலங்கை திருகோணமலையில் வளமான நாடு அழகான வாழ்க்கை சமூக சக்தி வேலைத்திட்டம்!

திருகோணமலையில் வளமான நாடு அழகான வாழ்க்கை சமூக சக்தி வேலைத்திட்டம்!

0
image

அரசாங்கத்தின் வளமான நாடு அழகான வாழ்க்கை சமூக சக்தி  வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, சேருவில பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காவன் திஸ்ஸபுர கிராமத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அனுசரணையோடு வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வைபவம் இன்று (02) இடம்பெற்றது.

இதன்போது 1 மில்லியன் ரூபாய் செலவில் பூந்தோட்டம் உருவாக்கி அதிலிருந்து பூக்களை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டமானது இன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேருவில பிரதேச சபையின் தவிசாளர் துஷார சம்பத், சேருவில பிரதேச செயலாளர்உரேஷ் நிசாந்த ,சேருவில மங்கள ரஜ மஹா விகாரையின் பௌத்த மதகுரு,சேருநுவர பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி,சேருவில பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   

Source: https://samugammedia.com/prosperous-country-beautiful-life-social-power-project-in-trincomalee-1780393428

NO COMMENTS

Exit mobile version