Home இலங்கை திருகோணமலை -முன்னம்பொடிவெட்டை பிரதேசத்தில் வயல் நிலங்களில் சிரமதானம்!

திருகோணமலை -முன்னம்பொடிவெட்டை பிரதேசத்தில் வயல் நிலங்களில் சிரமதானம்!

0
image

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் திருகோணமலை -முன்னம்பொடிவெட்டை பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்கள் மற்றும் அதனை அண்டிய இடங்கள் இன்று புதன்கிழமை (24) சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.

இதனை முன்னம்பொடிவெட்டை கமநல சேவை நிலையம் ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது வயல் நிலங்களில் காணப்பட்ட கிரிமிநாசினி போத்தல்கள்,களன்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் சிரமதானம் மூலம் அகற்றப்பட்டன.

அத்தோடு வயல் நிலங்களில் வீசப்படும் கிரிமி நாசினி போத்தல்களை சேகரிப்பதற்கா விவசாய சங்கங்களுக்கு பைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

சிரமதான பணியில் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் , விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.        

Source: https://samugammedia.com/shramadhana-on-fields-in-the-trincomalee-munnampodivettai-area-1782298123

NO COMMENTS

Exit mobile version