Home இலங்கை நீதிமன்றம் முன்னால் பதற்றம்; தனிநபர் திடீர் போராட்டம்!

நீதிமன்றம் முன்னால் பதற்றம்; தனிநபர் திடீர் போராட்டம்!

0
image

நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் நபர் ஒருவர் திடீரென மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகியோருக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்குள் ஆரம்பமாகவிருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் வருகை தந்த நபர் ஒருவர் திடீரென கடுமையான முறையில் தனது எதிர்ப்பை வெளியிட்டு, போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

இதனால் நீதிமன்ற வளாகத்தை சூழவிருந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் எதற்காக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார் மற்றும் அவரது பின்னணி என்ன என்பது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

இச்சம்பவம் குறித்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/tension-outside-the-court-individual-stages-a-sudden-protest-1783095451

NO COMMENTS

Exit mobile version