வடமராட்சி பருத்தித்துறை நகர சபையினரால் நவீன சந்தை தொகுதியிலுள்ள வாடகை முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு தகரத்திலான கொட்டகை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி அவர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை அடுத்து குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கான கொட்டகை நகரசபையால் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பருத்திதுறை நவீன சந்தை தொகுதியில் போலீசார் கடமை மேற்கொள்வதற்கெனவும் நகரசபையால் தனியான அறை ஒன்றும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
