நாட்டின் பல பகுதிகளில் இன்று (04) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Source: https://samugammedia.com/thunderstorms-in-many-areas-today-1788494933
