Home இலங்கை பொகவந்தலாவ செப்பல்டனில் மரையை கொன்று இறைச்சி விற்ற இருவர் கைது!

பொகவந்தலாவ செப்பல்டனில் மரையை கொன்று இறைச்சி விற்ற இருவர் கைது!

0
image

பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை கம்பி வலை  அமைத்து கொன்று அதன் இறைச்சியை விற்ற இரு சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் இன்று (15) ம் திகதி கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.

 

பொவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தின் என்.சி (N.C) பிரிவில் உள்ள  சந்தேக நபர்கள் அதே தோட்டத்தை சேர்ந்த இரு குடியிருப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பம் கொல்லப்பட்ட மரையின் இறைச்சியை தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்றுவிட்டு பின்னர் எஞ்சிய மேலும் 10 கிலோ இறைச்சியை பொகவந்தலாவை நகரிலுள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பதற்காக பொலித்தீன் பையில் கொண்டு சென்ற போதே இவர்கள் கைதாகினர்.

 

சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நுவன் மதுசங்க தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/two-arrested-for-killing-a-mare-and-selling-its-meat-in-bogawantalawa-1781522737

NO COMMENTS

Exit mobile version