Home இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் விசாரணை

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் விசாரணை

0
image

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இன்று (11) விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை ஷிரான் பாசிக் கொள்வனவு செய்துள்ளதாகவும், குறித்த வீடு அவரது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த சொத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, அவர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/drug-smuggler-shiraan-questioned-at-basiks-fathers-place-1789107343

NO COMMENTS

Exit mobile version