Home இலங்கை முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்ததா? யாழில் இன்று போராட்டம்

முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்ததா? யாழில் இன்று போராட்டம்

0
image

முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்ததா? என்ற தொனிப்பொருளில் யாழில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

சமூக நீதிக்கான சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2 மணிக்கு  இடம்பெற்றது. 

குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் முட்டாசுக்கடை சந்தியிலிருந்து யாழ்.தந்தை செல்வா கலையரங்கம் வரை முன்னெடுக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுக்காக ஒன்றாகப் போராடுவோம் போன்ற பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் இன, மத பேதமின்றி தமிழர், சிங்களவர்கள், மதபோதகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/is-history-over-with-mullivaikkal-protests-in-jaffna-today-1780404005

NO COMMENTS

Exit mobile version