மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வடமாகாண Taekwondo சாம்பியன்ஷிப் போட்டியில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மன்னார் பெண்கள் அணி 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அதேவேளை, மன்னார் ஆண்கள் அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தை (First Runner-up) பெற்றுள்ளது.
