Home இலங்கை வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்; 9 ஆம் தரப் பரீட்சை திடீர் ஒத்திவைப்பு

வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்; 9 ஆம் தரப் பரீட்சை திடீர் ஒத்திவைப்பு

0
image

இரண்டாம் தவணைப் பரீட்சைகளின் ஒரு பகுதியாக இன்று (22) நடைபெறவிருந்த 9 ஆம் தரத்துக்கான புவியியல் மற்றும் குடியியல் கல்விப் பாடங்களுக்கான பரீட்சையை தென் மாகாணக் கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி நடைபெறும் என தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள் அச்சிடும் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உரிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வினாத்தாள்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான மாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட கல்வி வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/delay-in-printing-question-papers-sudden-postponement-of-9th-grade-exam-1784695382

NO COMMENTS

Exit mobile version