பாணந்துறை – ஹிரன பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவர் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஒடித்யா முதுமாலி விஜேசேகர என்ற குறித்த யுவதி, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வந்ததுடன், எதிர்காலத்தில் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவுடன் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு வயது முதலே சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறலுக்குப் பின்னர், அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இளம் வயதிலேயே அவரது வாழ்க்கை இவ்வாறு முடிவுக்கு வரும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒடித்யாவின் தந்தை விஜேசேகர தொழிலதிபர் எனவும், அவருக்கு 16 மற்றும் 13 வயதுடைய இரு சகோதரிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
