இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துகள்
அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 1,222 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் வீதி விபத்துகள் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
