வரி செலுத்துவோர் அடையாள எண்களைப் (TIN) பெறுவதற்காக உள்நாட்டு இறைவரி
திணைக்களத்தில், மொத்தம் 10 மில்லியன் பேர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் குறைந்தது 7 மில்லியன் பேர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை
என்று திணைக்கள பிரதி ஆணையாளர் பி.கே.எஸ். சாந்த கூறியுள்ளார்.
10 மில்லியன் பேர்
ஊடகங்களுக்கு இந்த தகவலை வழங்கிய அவர்,
பதிவு செய்யப்பட்ட 10 மில்லியன்
பேரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் அடங்குவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 2023, டிசம்பர் 31க்குள் 18
வயதை எட்டுபவர்கள் மற்றும் ஜனவரி 1, 2024க்குப் பிறகு 18 வயதை எட்டுபவர்கள்
அனைவரும் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பதிவைப் பெறுவது கட்டாயமாக்கும்
வகையில், 2023 மே மாதத்தில் ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த நேரத்தில் TIN பெறுவது சட்டப்பூர்வ தேவையாக மாறியது,
ஆனால் பலர் ஆரம்பத்தில் அவர்களின் எண்களைப் பெறவில்லை.
பின்னர், உள்நாட்டு
இறைவரி, அவர்களுக்கான TIN பதிவுகளை முறைப்படுத்தி வழங்கியது,
இதனால் பதிவுசெய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்தது
என்று சாந்த கூறியுள்ளார்.
அடையாள எண்
இந்த நிலையில், வரி குறிப்புகளை எளிதாக்குவதற்கு மக்கள் தங்கள் TIN-களைப்
பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நோக்கத்திற்காக, இறைவரியின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை
அலுவலகங்களுக்குச் செல்லாமல் மக்கள் தங்கள் TIN-களைப் பெறுவதற்கான இணைய
முறையை, திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில், வங்கி வைப்புத்தொகை, வாகனப் பதிவுகள் மற்றும் உரிமை
பரிமாற்றங்கள், நிலப் பதிவுகள், வணிகப் பதிவுகள், கடன் அட்டைகளைப் பெறுதல்
மற்றும் பல நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி மற்றும் சட்ட
நடவடிக்கைகளுக்கு TIN கட்டாயமாகிவிடும் என்று பிரதி ஆணையாளர்
குறிப்பிட்டுள்ளார்.
