Home இலங்கை சமூகம் எல்ல – வெல்லவாய வீதியில் 10 ஆபத்தான இடங்கள் அடையாளம்

எல்ல – வெல்லவாய வீதியில் 10 ஆபத்தான இடங்கள் அடையாளம்

0

அண்மையில் விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்த எல்ல மற்றும் ராவண எல்ல இடையேயான எல்ல – வெல்லவாய சாலையில் கிட்டத்தட்ட 10 ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த இடங்கள் குறித்து சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக பொறியாளர் எஸ்.எஸ். ஹென்னாயக்க தெரிவித்தார்.

ஆபத்தான இடங்களில் மண் அள்ளும் பணி 

வீதியின் இருபுறமும் சரிசெய்யக்கூடிய ஆபத்தான இடங்களில் மண் அள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் சரிசெய்யப்படும் வீதியின் அளவு 26 கிலோமீட்டர் ஆகும்.

பதுளை மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்க ஒதுக்கப்பட்ட ரூ. 700 மில்லியன் ஒதுக்கீடு அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version