Home இலங்கை சமூகம் திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு

திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு

0

​டிட்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால்
பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள்
நேற்று (24) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த துரித நடவடிக்கையின் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய
குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7,515
விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேயர் ஒன்றுக்கு150,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.

மீண்டும் பயிர் செய்கை நடவடிக்கை

இதற்காக அரசாங்கம்1,001 ரூபாவை ஒதுக்கி, அதனை நேற்றைய தினத்திற்குள் வழங்கி
முடித்துள்ளது.

​ இந்த நிதி விநியோகம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இது வெறும்
நஷ்டஈடு மாத்திரமல்ல என தெரிவித்துள்ளனர்.

சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த
விவசாயிகள் மீண்டும் பயிர் செய்கை நடவடிக்கைகளை
ஆரம்பிப்பதற்கான ஒரு ஊட்டிப்பாகவும் இது வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

திடீர் வெள்ளத்தினால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், அடுத்த
சில நாட்களுக்குள்ளேயே அரசாங்கம் இந்த நிதியை நேரடியாக விவசாயிகளின் வங்கிச்
கணக்குகளுக்கு வைப்புச் செய்தமை குறித்து மாவட்ட விவசாயிகள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் பெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்துள்ளதாகவும், உடனடியாக
விதைப்பணிகளை தொடங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version