Home இலங்கை அரசியல் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கைது

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கைது

0

மோசடியான விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் குழுவினால் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் 

கனடாவுக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 11 இலங்கையர்களும் கொழும்பு, களுத்துறை, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

அவர்கள் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பிய ஒரு குழுவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version