Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பரிதாபமாக பலி

முல்லைத்தீவில் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பரிதாபமாக பலி

0

முல்லைத்தீவில் 11 மாத குழந்தையொன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இந்தநிலையில், வீட்டில் குறித்த குழந்தை தனது தாயுடன் குளியலறையில் இருந்த போது தண்ணீர் நிறைந்த தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ள நிலையிலேயே உயிரிழந்துள்ளது.  

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/11-month-baby-died-after-falling-water-tank-1727094928

NO COMMENTS

Exit mobile version