Home இலங்கை சமூகம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த 11 வயது பாடசாலை மாணவி

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த 11 வயது பாடசாலை மாணவி

0

அனுராதபுரம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து
உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்த பின்னர் சிறுமி பாடசாலை பேருந்தில் ஏறி முயன்றபோது இந்த
சம்பவம் நேர்ந்தது.

 பிரேத பரிசோதனை 

சம்பவத்திற்குப் பிறகு அவர் உடனடியாக கெக்கிராவை மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையின்
பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

   

அனுராதபுரம் மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை செய்த
போதிலும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இதன் விளைவாக, உடல் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்விற்காக மருத்துவ பரிசோதகருக்கு
அனுப்பப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், சிறுமியின் உடல் அவரது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version