Home இலங்கை சமூகம் நாட்டிலுள்ள தொடருந்து கடவைகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டிலுள்ள தொடருந்து கடவைகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0

நாட்டில் சுமார் 1,200 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் இருப்பதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தொடருந்து கடவைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள், பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய தொடருந்து கடவைகளிலேயே இடம்பெறுவதாக, கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

தொடருந்து விபத்து

தொடருந்து திணைக்கள அதிகாரிகள் அண்மையில் குறித்த குழுவின் முன்னிலை அழைக்கப்பட்ட போது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த சில நாட்களாக பல தொடருந்துகள் விபத்துக்களில் சிக்கியதாகவும் இதனால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version