Home இலங்கை சமூகம் தொடர் மழையால் யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்கள் பாதிப்பு

தொடர் மழையால் யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்கள் பாதிப்பு

0

தொடர்ச்சியாக பொய்யும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் (Jaffna) 15 குடும்பங்களைச் சேர்ந்த
60பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/157 கிராம சேவகர் பிரிவில்
ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கோப்பாய் பிரதேச செயலர்
பிரிவிற்குட்பட்ட ஜே/278 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த
8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிப்புக்குள்ளானோர் 

மேலும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/410 கிராம சேவகர்
பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், ஜே/417 கிராம சேவகர் பிரிவில் 5
குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஜே/393 கிராம சேவகர் பிரிவில் 3
குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும், ஜே/413 கிராம சேவகர் பிரிவில் 3
குடும்பங்களைச் சேர்ந்த 7பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version