Home இலங்கை சமூகம் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (23) இரவு இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டபோது
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும்
அதிலிருந்த 16 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட  கடற்றொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு
பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version