Home இலங்கை சமூகம் நூற்றுக்கணக்கில் பதிவாகியுள்ள தேர்தல் விதிமீறல்கள்!

நூற்றுக்கணக்கில் பதிவாகியுள்ள தேர்தல் விதிமீறல்கள்!

0

இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 164 தேர்தல் விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்பரல் தெரிவித்துள்ளது.

இதுவரையில் தங்களிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 109 முறைப்பாடுகளை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் 55 முறைப்பாடுகளை உறுதி செய்ய முடியவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமீறல்கள்

இதேவேளை அரசியல் கட்சியின் – வேட்பாளர் அலுவலகத்தின் மீது தாக்குதல்,தேர்தல் விதிமுறைகளுக்கு முரணான விதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக தேர்தல் அலுவலகங்களை பேணுதல், வாக்காளர் மோசடி அதற்கான முயற்சிகள் குறித்த முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 10 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version