Home உலகம் உக்ரைன் – ரஷ்யா போர் : 17 இலங்கையர்கள் உயிரிழப்பு

உக்ரைன் – ரஷ்யா போர் : 17 இலங்கையர்கள் உயிரிழப்பு

0

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு இலங்கை (Sri Lanka) அரசாங்கம் ரஷ்யாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உயிர்கள் பறிபோயுள்ளன.

பொய்யான வாக்குறுதி

அத்தோடு, குறித்த இரு நாடுகளும் வெளிநாடுகளிலிருந்து தமது நாட்டு இராணுவத்திற்கு ஆட்களை சேர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் வேலைவாய்ப்பு என பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ரஷ்யா தனது இராணுவத்தில் ஆட்களை இணைத்து வருவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

மேலும், அவ்வாறு சேர்க்கப்படும் நபர்களிற்கு வலுக்கட்டாயமாக போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version