Home இலங்கை குற்றம் யாழ்.குருநகர் கடற்பரப்பில் 183 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

யாழ்.குருநகர் கடற்பரப்பில் 183 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) குருநகர் கடற்பரப்பில் வைத்து 183 கிலோ கேரளக்
கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை
இன்று (04) அதிகாலை 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார் விசாரணை

இருப்பினும் சந்தேகநபர்கள்
எவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்பு நடவடிக்கையின் போது 92 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா
பொட்டலங்கள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது
குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/183-kg-kerala-drugs-recovered-sea-gurunagar-jaffna-1733309087

NO COMMENTS

Exit mobile version