Home இலங்கை சமூகம் பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

0

யாழில் (Jaffna) பூப்புனித நீராட்டுவிழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த
இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பண்டத்தரிப்பு –
பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

நீராட்டுவிழா கொண்டாட்டம் 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மல்லாகம் – பயிரிட்டால் பகுதியில் நேற்றையதினம் பூப்புனித நீராட்டுவிழா கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.  

குறித்த நிகழ்வுக்கு சென்று நேற்றிரவு அங்கு
உணவு அருந்திக்கொண்டிருந்தார்.

இதன்போது ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கும்போது எழுந்து சென்று அந்த பாடலுக்கு
இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இதன்போது திடீரென கீழே விழுந்து
மயக்கமடைந்துள்ளார்.

மரண விசாரணை

இந்தநிலையில் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர்
ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

சாட்சிகளை தெல்லிப்பழை காவல்றையினர் நெறிப்படுத்தியதுடன் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள்
கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version