1983 – ஜுலை இலங்கையில் நடந்த கலவர சம்பவம் பலர் மனதில் இன்னமும் தீரராத வடுக்களை பதிவு செய்துள்ளது.
“ஜுலை படுகொலைகள் தான் ஈழத்தமிழர்களின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அந்த காலக்கட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கான அனுதாபமும் போராட்டத்திற்கான ஆதரவும் உள்ளும் புறமும் பெரிதாகவே இருந்தது.
இலங்கையை தாண்டிய சர்வதேச ஆதரவில் தமிழ் நாட்டின் ஆதரவு மிக அதிகமாகவே இருந்தது” என மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
1983 – ஜுலை கலவரம் தொடர்பில் இதுவரையிலும் வெளிவராத பல்வேறு உண்மைகளை ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பின் நேரலை நிகழ்ச்சி,
