Home இலங்கை சமூகம் யாழில் நூதனமுறையில் நடந்த கொள்ளை : இலட்சக்கணக்கில் இழந்த வர்த்தகர்

யாழில் நூதனமுறையில் நடந்த கொள்ளை : இலட்சக்கணக்கில் இழந்த வர்த்தகர்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டு வர்த்தகர் ஒருவரிடம் 2 இலட்சம் ரூபா பணத்தை களவாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

இதன்போது “உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது” என வர்த்தகரிடம் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

மெகா அதிர்ஷ்டம்

மேலும், மெகா அதிர்ஷ்டத்துக்கான காலக்கெடு முடிவடையவுள்ளது எனத் தெரிவித்து உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு கோரவே குறித்த வர்த்தகரும் தனது வங்கி இலக்கத்தைக் கூறியுள்ளார். 

அதன் பின்னர் உங்களுக்கு ஆறு இலக்கங்களைக் கொண்ட எண்கள் குறுஞ்செய்தியாக வரும். அதனைத் தம்மிடம் கூறுமாறும் வினவவே குறித்த வர்த்தகர் அதனையும் கூறியுள்ளார். 

அதனையடுத்து அவரின் வங்கிக் கணக்கிலிருந்து சடுதியாகப் பணத்தொகை குறைவடைந்து சென்றதையடுத்து வர்த்தகர் வங்கிக்குச் சென்று தனது சேமிப்புக் கணக்கின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளார். 

இதனால், அவரது எஞ்சிய பெரும்தொகைப் பணம் மோசடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version