யாழ்ப்பாணத்தில் இன்று(11) காலை பெய்த மழை அனர்த்தம் காரணமாக 7 குடும்பங்களைச்
சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/351 கிராம சேவகர்
பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும், ஜே/363 கிராம சேவகர் பிரிவில் ஒரு
குடும்பத்தை சேர்ந்த 7பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தத்தினால் பாதிப்பு
மேலும், ஜே/364 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச்
சேர்ந்த 18பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/393 கிராம சேவகர்
பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
