Home உலகம் ஜேர்மனியில் கொடூரம் : கத்திகுத்து தாக்குதலில் இருவர் பலி

ஜேர்மனியில் கொடூரம் : கத்திகுத்து தாக்குதலில் இருவர் பலி

0

ஜேர்மனியில் (Germany) பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று (22) ஜேர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் (Aschaffenburg) நகரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தையும், ஒரு பெரியவரும் உயிரிழந்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதல்

அத்தோடு, இன்னும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தாக்குதல் நடந்த இடத்திலேயே காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரை வேறு யாரும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் தாக்குதலின் காரணம் குறித்து காவல்துறையினர் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/2-people-are-killed-in-a-knife-attack-in-germany-1737571682

NO COMMENTS

Exit mobile version