சீதுவை அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவை- ராஜபக்ச மாவத்தையில் நேற்றிரவு(21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சொய்சா என்பவர் காயமடைந்திருந்தார்.
ஜாஎல பிரதேச சபையின் சீதுவை வட்டார தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் தந்தையான அவர், தற்போது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கைது
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
