Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் : மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தினை கல்வி அமைச்சு (MOE) மற்றும் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID)அதிகாரிகள் நேற்று முன்தினம் (01) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை

இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என சில பெற்றோர்கள் கோருகின்ற நிலையில், மீண்டும் பரீட்சை நடத்தப்படக் கூடாது எனப் பரீட்சைக்குத் தோற்றிய பெரும்பாலான சிறுவர்களும் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த விடயம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காகப் புலமைப்பரிசில் பரீட்சையில் பாதிப்பை எதிர்நோக்கிய தரப்பினர் சிலர் நேற்றைய தினம் (02) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

விடைத்தாள் திருத்தப் பணி

கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததாகப் பெற்றோரும் ஆசிரியர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version