Home இலங்கை சமூகம் விவசாயிகளுக்கு 25000 ரூபாய் உர நிவாரணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு 25000 ரூபாய் உர நிவாரணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

0

விவசாயிகளுக்கு அடுத்த வருடத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உர நிவாரணம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியா மதவாச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் நெருக்கடி வருகின்ற வேளையில் தப்பியோடுவதைப் போன்று நாட்டு மக்களின் கஷ்டங்களிலிருந்து விடுவிப்பது இலகுவானதல்ல.

நாட்டின் பொருளாதாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப விவசாயிகள் வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறக்கவில்லை.

அதனாலேயே அடுத்த வருடத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உர நிவாரணம் வழங்கத் தீர்மானித்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version