Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 28 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 28 பேர் காயம்

0

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (25) காலை மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில்

இடம்பெற்றுள்ளது.

முதற்கட்ட விசாரணை

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version