Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

0

முல்லைத்தீவில் (Mullaitivu) ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல
வாக்களிப்பு இரண்டாவது நாளாக காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய
ரீதியில் நேற்றையதினம் (04) ஆரம்பமாகியது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) சுமுகமாக ஆரம்பமாகிய நிலையில் இரண்டாவது நாளான இன்றும் (05) சுமுகமாக நடைபெற்றது.

உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு 

முல்லைத்தீவு வலயக்கல்வி
அலுவலகம் மற்றும் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்
உத்தியோகத்தர்கள் தமது தபால் மூல வாக்குகளை அளித்தனர்.

அத்துடன் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் உள்ள வாக்கெடுப்பு நிலையங்களிலும் தபால் மூல
வாக்குகளை அளிப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக
தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version