Home இலங்கை சமூகம் தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவுக்கு தஞ்சம்

தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவுக்கு தஞ்சம்

0

தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

குறித்த மூவரும் இன்றையதினம் (05.07.2024) காலையை
சென்றடைந்தனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது-34),அவரது பிள்ளைகளான அனுஜா
(வயது-08),மிஷால் (வயது-05) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு
தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்த கடற்பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து
விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையம் அழைத்துச்
சென்றனர்.

மூவரும் இந்தியா செல்வதற்கு படகு கட்டணமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் பொலிஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர்.

NO COMMENTS

Exit mobile version