யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் ஹெரோயினுடன்
பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு
பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்.
போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின்
இதன்போது இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 325 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் அவர்களை
நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
