Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

0

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். 

தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதிசுண்டி குளம் சந்தி விஸ்வமடு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை வீதி சோதனைக்கு பொலிஸார் உட்படுத்தியுள்ளனர். 

இதன்போது, தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை வீதிச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

அதிகாரி காயம் 

இந்நிலையில், பொலிஸார் சோதனை இடுவதற்கு முற்பட்ட போது ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்தலால் பொலிஸாரை தாக்கியுள்ளார். 

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் கைதான நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version