Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலுக்காக மறைமுகமாக திரட்டப்படும் 300 மில்லியன் ரூபா : வெளியான தகவல்

அதிபர் தேர்தலுக்காக மறைமுகமாக திரட்டப்படும் 300 மில்லியன் ரூபா : வெளியான தகவல்

0

நாட்டில் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மறைமுகமாக நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சு மேற்கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 1,028 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் புழக்கத்தில் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

2024 மே 10 ஆம் திகதிக்குள் சுமார் 1,028 மதுக்கடைகளுக்கு புதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 30 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னர் 10 மில்லியனும் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் 20 மில்லியனும் பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு (Colombo) மாவட்டத்தில் 137 அனுமதிப்பத்திரங்களும், கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 128 அனுமதிப்பத்திரங்களும், ஹோட்டல்களுக்கு 1,089 அனுமதிப்பத்திரங்களும், பல்பொருள் அங்காடிகளுக்கு 306 அனுமதிப்பத்திரங்களும், உணவகங்களுக்கு 765 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக  கூறியுள்ளார்.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தியில் காண்க…


https://www.youtube.com/embed/OtBuo-FU4mg

Source: https://ibctamil.com/article/300-million-rs-raised-for-presidential-election-1720680433

NO COMMENTS

Exit mobile version