Home இலங்கை சமூகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்

0

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என
அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34 வது ஆண்டு நினைவேந்தல் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நீதிகோரிய
போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆந் திகதி கிழக்குப் பல்கலைக் கழக முகாமில்
தஞ்சம்பெற்றிருந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தொடர்பில் இரு வரை எவ்விதமான பதிலும் வழங்கப்படவில்லை.

பல்கலைக்கழக வளாக முன்றல்

இந்நிலையில், இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றிலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை
காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி
அ.அமலநாயகி,கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர்
வி.கஜரூபன்,சிவில் சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயபிரகாஸ், அகம்
மனிதாபிமான வள நிலையத்தின் திட்டமுகாமையாளர் செல்வி நா.மிருஜா உட்பட
பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு
நீதி கோரி கவன ஈர்ப்புபேராட்டத்தில் ஈடுபட்டதுடன் உறவுகள் மற்றும் மாணவர்கள்
காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும்
மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

Source: https://tamilwin.com/article/34th-anniversary-of-the-158-disappeared-1725534260

NO COMMENTS

Exit mobile version