Home இலங்கை சமூகம் கட்டுநாயக்கவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!

கட்டுநாயக்கவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!

0

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மூன்றாவதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிகுண்டு மிரட்டலானது  இந்தியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்றுக்கே இன்று (28) விடுக்கப்பட்டுள்ளது.

அவசர தரையிறக்கம்

இந்த விமானம் வழமைபோன்று இன்று மாலை 04.05 மணிக்கு தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 08 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 08 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

இந்த விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இந்தியன் எயார்லைன்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மேலாளருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கை

இதனை தொடர்ந்து,  விமானத்தை அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்கவிமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாகவும் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த  இரண்டு விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டுநாக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version